மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் சுனாமி நகரை சேர்ந்த லட்சுமி என்பவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியில் இருந்த 2.5 பவுன் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர் சில தினங்களுக்கு முன்பு திருடி சென்றார். இது குறித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட ஆகாஷ் என்பவரை நேற்று கைது செய்து நகையை மீட்டனர்.
What's Your Reaction?






