சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 46) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியிடம் செல்போனில் வீடியோ காட்டுவதாக தனது வீட்டிற்கு அழைத்து சென்று ஆபாச வீடியோவை காட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்து இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நேற்று சேலம் நீதிமன்றத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வடிவேலுக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 1, 000 அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு வழங்கினார்.
What's Your Reaction?






