மின்சாரம் தாக்கி தலைமை காவலர் பரிதாப பலி

Apr 14, 2024 - 17:48
 0  25
மின்சாரம் தாக்கி தலைமை காவலர் பரிதாப பலி
மின்சாரம் தாக்கி தலைமை காவலர் பரிதாப பலி

திருச்சி காவல்காரபாளையம் பகுதியை சேர்ந்தவர் கே. கார்த்திகேயன்.இவர் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார்.இவர் அங்குள்ள வள்ளுவர் நகரில் உள்ள சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவரது வீடு புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.இன்று காலை எழுந்ததும் கார்த்திகேயன் புதிதாக கட்டப்பட்டு வரும் சுவரில் தண்ணீர் ஊற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சார ஒயரில் தண்ணீர் அடித்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.தகவலறிந்து வந்த பெட்டவாய்த்தலை போலீசார் கார்த்திகேயனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் குடும்பத்தலைவனை இழந்த கார்த்திகேயன், குடும்பத்தினர் கதறி அழுதது அவரது உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow