கடன் மானிய தொகையில் மோசடி;ஸ்டேட் வங்கி ஊழியர் கைது

சென்னை, அய்யம்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவர் ஊட்டியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், இளநிலை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.சமீபத்தில் இவருக்கு பணி மாறுதல் உத்தரவு வந்துள்ளது. இந்நிலையில் வங்கியில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. இதில் விவசாய கடன் வழங்கும் பிரிவில் இளநிலை அதிகாரி செந்தில்குமார் பயனாளிகளுக்கு சேர வேண்டிய மானிய தொகையை, தனக்கு தெரிந்தவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து செந்தில்குமாரின் முழு பணியையும் அதிகாரிகள் தணிக்கை செய்தனர். இதில் அவர் ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்து 146 மோசடி செய்தது தெரியவந்தது. புகாரின்படி ஊட்டி நகர மத்திய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை நேற்று கைது செய்தனர்.
What's Your Reaction?






