திருவாடானை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருவாடானை தாலுகா நம்புதாளையில் மணவெளி உறவு காரணமாக பரமக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நேற்று முக்கிய குற்றவாளியான சரவணன் என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் குற்றவாளிகள் தப்ப உதவிய கார் டிரைவர் திருவாடானை சமத்துவபுரத்தை சேர்ந்த கெல்வின் ராஜ் (19) என்பவரை தொண்டி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?






