மதுராந்தகம் அருகே பெரியப்பாவை அடித்துக் கொன்ற இளைஞர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த ஒரத்தி SS பிளாட் தனியார் குடியிருப்பில் வசிப்பவர் பிரகாஷ்-ஜமுனா ராணி தம்பதி.ஜமுனா ராணியின் தங்கையான மஞ்சுளா மற்றும் அவரது கணவர் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து அவர்களுடைய மகனான சூர்யா வயது 19 என்பவரை பிரகாஷ் மற்றும் ஜமுனா ராணி இருவரும் வளர்த்து வந்தனர்.இந்நிலையில் இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே சுற்றி திரிந்து வருவதைக் கண்டிப்பதால் அவரது பெரியப்பாவுக்கும் சூர்யாவுக்கும் அடிக்கடி சண்டை வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் இருவருக்கும் நேற்று இரவு சண்டை அதிகமானதால் மது போதையில் இருந்த சூர்யா தன் பெரியப்பா பிரகாஷை கட்டையைக் கொண்டும் கத்தியை கொண்டும் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு அச்சரப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலே பிரகாஷ் உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த ஒரத்தி காவல்துறையினர் சூர்யாவை கைது செய்தனர். மேலும் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






