144 தடை உத்தரவு பிறப்பித்தது காவல் துறை

இன்று முதல் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அடுத்து வரும் 60 நாட்களுக்கு, அதாவது இன்று மே 28ம் தேதி துவங்கி கொல்கத்தா முழுவதுமே 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக அம்மாநில காவல் துறை அறிவித்துள்ளது.இது குறித்து மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா காவல் ஆணையர் வினீத்குமார் கோயல் பிறப்பித்துள்ள உத்தரவில், 'மாநகரில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் பொது அமைதிக்கு பெரியளவிலான இடையூறுகளை ஏற்படுத்தும் என்ற நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. எனவே, இன்று மே 28ம் தேதி முதல் ஜூலை 26ம் தேதி வரை அடுத்து வரும் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.கொல்கத்தா நகரில் அமைதிக்கு இடையூறு ஏற்படுவதை உடனடியாகத் தடுக்கும் வகையில் பேரணிகள், கூட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி மறுப்பதற்கு போதிய காரணங்கள் உள்ளன. பொது நலனைக் கருத்தில் கொண்டு பொது அமைதிக்கு இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்க இந்த உடனடி நடவடிக்கை' மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.144 தடை உத்தரவின்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது சட்டவிரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






