கைபேசியை சார்ஜ் போட முயன்ற பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலி

சென்னையை அடுத்த எா்ணாவூா் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் முகுந்தன் இவரது மகள் அனிதா (14).இவா், எண்ணூா் கத்திவாக்கம் சென்னை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.இந்த நிலையில், சனிக்கிழமை இரவு அனிதா, கைப்பேசியை சாா்ஜ் செய்வதற்காக ஈரக்கையுடன் சுவிட்ச்சை ஆன் செய்ததாகக் கூறப்படுகிறது.அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி அனிதா தூக்கிவீசப்பட்டாா். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினா்கள் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்த்தனா்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.இதுகுறித்து இன்னொரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?






