சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது.

Aug 10, 2025 - 18:46
 0  3
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, உடையார்பாளையம் காவல்துறையினர் இடையார் மெயின் ரோட்டில் இயங்கி வரும் அரசு அனுமதி பெற்ற பாரில், நேற்று இரவு தீடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அரசு மது பாட்டில்களை கள்ளத்தனமாக வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த சங்கிலிமுத்து மகன் மணிவண்ணன் (30) என்பவரிடமிருந்து 617 அரசு மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் எதிரியின் மீது உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow