முன்னாள் அதிமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது; கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் முனிகிருஷ்ணன். 50 வயதான இவர் தனது நண்பர்களுடன், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு சென்று வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.அப்போது இவர்களுடன் காரில் அதேபகுதியைச் சேர்ந்த சீனிவாஸ், பசவராஜ் ,மஞ்சுநாத் ,சந்திரப்பா,ஆகியோர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து வந்துள்ளனர்.அப்போது அந்த கார் இன்று காலை தருமபுரி அருகே மகேந்திரமங்கலம் அருகே ஜிட்டாண்டஅள்ளி புதிய தேசிய நெடுஞ்சாலை பிரிவு பகுதியில் வந்ததுகொண்டிருந்தபோது சாலை தடுப்புச் சுவரில் மோதி பின்பு அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.இதில், காரை ஓட்டி வந்த முனிகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். உடனே விபத்து குறித்து அப்பகுதி மக்கள் மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த முனிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?






