500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல்; இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது

Jan 17, 2025 - 05:55
 0  7
500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல்; இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது

தூத்​துக்​குடி மாவட்டம் சாயர்​புரம் பகுதி​யில் சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைக்​கப்​பட்​டுள்ளதாக வனத் துறை​யினருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் உத்தர​வின் பேரில், ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலர் பிருந்தா தலைமையிலான வனத் துறை​யினர் சாயர்​புரம் பகுதி​யில் தீவிர விசாரணை நடத்​தினர்.அப்போது, காமராஜர் நகர் பகுதி​யில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்​கப்​பட்​டுள்ளதாக தகவல் கிடைத்​தது. தொடர்ந்து, அங்கு ஓரிடத்​தில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை வனத் துறை​யினர் பறிமுதல் செய்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow