சலூன் கடை இளைஞர் வெட்டிக்கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது வாகைகுளம். இந்தப் பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் இசக்கி பாலா (26).இவர் வாகைகுளம் மெயின்ரோட்டில் ஆண்கள் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் முடி திருத்தும் பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது கடைக்கு சென்ற மர்ம நபர்கள் இசகிபாலாவிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இசக்கி பாலாவை வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த இசக்கி பாலா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து, இந்த வெறித்தனத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் அம்பாசமுத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இசக்கிபாலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். முன்விரோதம் காரணமாக இந்த கொலையா? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அருகில் சிசிடிவி கேமரா உள்ளதா என ஆய்வு செய்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சலூன் கடையில் வேலை பார்த்து வந்த வாலிபர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலை நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலைக்கு முன் விரோதம் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






