3 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ (ISO) தர சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி தாலுகா, பொள்ளாச்சி கிழக்கு, மகாலிங்கபுரம் காவல் நிலையங்களுக்கு காவல் நிலைய பதிவேடுகளை நல்ல முறையில் பராமரித்ததற்கும், பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கும், காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் விசாரணை செய்தலுக்கும், காவல் நிலைய அதிகார வரம்பிற்குள் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியைப் பராமரித்தல், மற்றும் அவசரநிலைகளுக்கு பதிலளிப்பதில் அதன் வெற்றிக்காக பொள்ளாச்சி தாலுகா,மகாலிங்கபுரம் மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையங்கள் நேற்று (25.03.2025) ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது.மேலும், மேற்படி காவல் நிலையங்களின் பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ததற்காக இந்திய தர கவுன்சிலிடமிருந்து பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார மதிப்பீட்டு QCI (WASH) விருதையும் இந்த காவல் நிலையங்கள் பெற்றுள்ளன. இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள், மேற்படி காவல் நிலையங்கள் ISO சான்று பெற பணியாற்றிய பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.ஸ்ருஷ்டி சிங் இ.கா.ப., பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சந்திரலேகா, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகன் மற்றும் மகாலிங்கபுரம் உதவி ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன் மற்றும் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறையினரின் பணியை வெகுவாக பாராட்டினார்.
What's Your Reaction?






