வீட்டில் சாராயம் காட்சியை 3 பேரை மடக்கி பிடித்த போலீசார்

ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஈஞ்சம்பள்ளியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்படி ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று காலை அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருந்தது. போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது, வீட்டுக்குள் மதுபானம் காய்ச்சி விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஈஞ்சம்பள்ளி கொன்னம்பாளையம் மேற்கு எஸ்டேட்டை சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பவர் கள்ளச்சாரயம் காய்ச்சுவதாக கூறப்படுகிறது. அவல் பூந்துறை பழனிகவுண்டன் வலசை சேர்ந்த குமார் (34), பூந்துறை சேமூர் லிங்க கவுண்டன் வலசு அம்பேத்கர் நகரை சேர்ந்த கார்த்தி (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும், 8 லிட்டர் சாராயம், 30 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பீப்பாய்கள் மற்றும் அடுப்புகளை பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?






