மீண்டும் புழல் சிறைக்கு சென்றார் செந்தில் பாலாஜி

Jul 24, 2024 - 06:14
 0  10
மீண்டும் புழல் சிறைக்கு சென்றார் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பரிசோதனை முடிந்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் ஓமந்தரர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை நடந்ததால், அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர். இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டன. செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு அவரை வெளியேற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், 2 நாட்கள் சிகிச்சைக்கு பின், உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow