ஈரோடு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை

ஈரோடு மாநகராட்சி எஸ்கேசி ரோட்டில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவி ஆர்.நேத்ரா ஸ்ரீ மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் நான்கு பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இதற்கான பாராட்டு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை சுமதி பதக்கங்களை வழங்கி மாணவியை பாராட்டினார். சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
What's Your Reaction?






