தென்காசி அருகே ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Apr 25, 2024 - 15:53
 0  6
தென்காசி அருகே ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறுவதற்காக நேற்று மாலை பயணிகள் காத்து கொண்டிருந்த போது ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்த நிழற்கூரையில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு இறந்த நிலையில் இருந்ததை கண்ட பயணிகள் ரயில்வே நிலைய அதிகாரிக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க காளிராஜா என்பது தெரிய வந்தது. மேலும் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதோடு அவர் நேற்று காலையில் வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு மதிய உணவை ஒரு கூடை பையில் எடுத்துக் கொண்டு வேலைக்கு கிளம்பியுள்ளார்.ஆனால் வேலைக்கு செல்லாமல் பாவூர்சத்திரம் ரயில்வே நிலையத்திற்கு வந்த காளிராஜா, ரயில் நிலையத்திற்கு வெளியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ரயில்வே நிலையத்தின் பிளாட்பார்ம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள ரயில்வே நிழற் கூரையின் ஒரு பகுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.நேற்று இரவு இறந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரயில்வே போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரயில்வே போலீசார் வாலிபர் காளிராஜா எதற்காக ரயில் நிலையத்திற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினையா? அல்லது காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், உறவினர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow