தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைகளுக்கு சீல்

Apr 27, 2024 - 22:17
 0  5
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைகளுக்கு சீல்

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகளை விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்று தூத்துக்குடி தோப்பு வடக்கு தெருவில் உள்ள பொன்னான்டி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கருப்பசாமி (54) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்தபோது, அங்கு கருப்பசாமி அவரது கடையில் 150 கிராம் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.அதேபோன்று முத்தையாபுரம் முள்ளக்காடு, ராஜீவ் நகரை சேர்ந்த கோமதிவேல் மகன் முருகன் (50) என்பவருக்கு சொந்தமான மளிகைகடையில் 4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.கருப்பசாமி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 4 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து, கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow