ஆம்னி பேருந்தில் இளம்பெண் சடலம் மீட்பு;காரணம் என்ன.? போலீஸ் விசாரணை

சென்னையிலிருந்து கோவைக்கு ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி ஊழியர் மகாலட்சுமி இறந்த நிலையில் சடலமாக மீட்டகப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த செவ்வாய் இரவு தனியார் ஆம்னி பேருந்து மூலம் கோவை திரும்பியுள்ளார். பேருந்தில் கீழ் படுக்கையில் பயணம் செய்த மகாலட்சுமி கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று காலை இறங்க வேண்டிய இடம் வந்தும் அந்த பெண் இறங்காததால் சந்தேகத்தின் பேரில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரிடம் காந்திபுரம் வந்த தகவலை கூற சென்றபோது அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே 108 ஆம்புலன்சிற்கு தகவலளித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காட்டூர் காவல் நிலையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மகாலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






