ஈரோட்டில் 4 இடங்களில் பட்டாசு கடை

ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் போலீஸ் கேண்டீன் சார்பில் பட்டாசு கடை அமைக்கப்படும். நடப்பாண்டும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்படி எஸ்.பி., அலுவலக போலீஸ் கேண்டீன், ஈரோடு ஆயுதப்படை வளாகம், கோபி, சத்தி என நான்கு இடங்களில் வரும், 26ம் தேதி முதல் பட்டாசு கடை துவங்குகிறது.இங்கு ‘கிப்ட் பாக்ஸ்’ மட்டும் விற்பனை செய்யப்படும்.போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் வாங்கி கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






