கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள மங்களக்குறிச்சி கிராமம் தெற்கு தெருவைச் சேர்நதவர் செல்வ மாரிமுத்து மனைவி பேச்சியம்மாள் (26). இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பேராசிரியை ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் அவரது மாமியார் மற்றும் நாத்தனார் இவரைத் தொடர்ந்து திட்டி மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் மன வேதனை அடைந்த பேச்சியம்மாள் தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவர் திருமணமான 5ஆண்டுகளில் உயிரிழந்துள்ளதால் சம்பவம் குறித்து கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
What's Your Reaction?






