தர்மபுரி அருகே ஆடு திருடிய இருவர் கைது

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த ஆல்ரப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர், 35; கூலித்தொழிலாளி.இவர், 5 ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த, 16ல் மாலை ஆடுகளை தன் வீட்டின் முன் கட்டி வைத்துவிட்டு துாங்கியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 2 ஆடுகளை காணவில்லை. இது குறித்து சந்திரசேகர் அளித்த புகார்படி கம்பைநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து குண்டல்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் வீரமணி, 33, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
What's Your Reaction?






