தர்மபுரி அருகே ஆடு திருடிய இருவர் கைது

Jul 27, 2024 - 15:02
 0  7
தர்மபுரி அருகே ஆடு திருடிய இருவர் கைது

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த ஆல்ரப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர், 35; கூலித்தொழிலாளி.இவர், 5 ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த, 16ல் மாலை ஆடுகளை தன் வீட்டின் முன் கட்டி வைத்துவிட்டு துாங்கியுள்ளார். அடுத்த நாள் அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 2 ஆடுகளை காணவில்லை. இது குறித்து சந்திரசேகர் அளித்த புகார்படி கம்பைநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து குண்டல்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் வீரமணி, 33, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow