சுற்றுலா பயணிகளை ட்ரோன் மூலம் கண்காணித்து எச்சரித்த ஒகேனக்கல் காவல் ஆய்வாளர்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஆழமான பகுதிகளான முதலைப் பண்ணை ராணிப்பேட்டை காவேரி ஆறு ஊட்டமலை பரிசல் துறை ஆலம்பாடி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர்.காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கேட்காத நிலையில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் நிலையும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் சபாபதி அறிவுத்தின்படியும் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான காவல்துறையினர் ஆழமான பகுதிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகளை ட்ரோன் மூலம் கண்காணித்து ஆழமான பகுதியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றி இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
What's Your Reaction?






