குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பைக் கவிழ்ந்து வாலிபர் பலி

குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலை பள்ளத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் கணேஷ் நகரை சேர்ந்தவர் வேணுகோபால் மகன் முத்துராஜா(26). இவர், புல்லாவெளியில் உள்ள உப்பளக் கம்பெனியில் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு குளத்தூரில் ஆனித்திருவிழா நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக முத்துராஜா, அவரது நண்பர் சிவமுருகனுடன் பைக்கில் வந்துள்ளார். நிகழ்ச்சியை முடித்து விட்டு ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் முத்துராஜா மட்டும் பைக்கில் வீடு திரும்பியுள்ளார்.கிழக்கு கடற்கரை சாலையில், வேப்பலோடை கேட் அருகே உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பைக்குடன் விழுந்ததில் முத்துராஜா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காலையில் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து குளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?






