போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கிய திருச்சி இளைஞர் கைது

திருச்சி - திருவானைக்காவல், அழகிரிபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30). இவர் செக்போஸ்ட் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.இவரது கடையின் அருகில் காவல்துறை வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. தனது கடைக்கு இடையூறாக காவல் துறை வாகனம் நின்றதால் மது போதையிலிருந்த அவர், அங்கிருந்த காவல் துறை வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்.
செக்போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து சென்று அவரைப் பிடித்து ஸ்ரீரங்கம் போலீஸில் ஒப்படைத்தனர். ஸ்ரீரங்கம் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






