பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் சமையல் மாஸ்டர் தற்கொலை

Jun 3, 2024 - 15:23
 0  15
பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் சமையல் மாஸ்டர் தற்கொலை

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் யுவராஜ்.சமையல் மாஸ்டரான இவருக்கு சரண்யா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி சரண்யா கோபித்துக் கொண்டு வாணியம்பாடியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் நேரில் சென்று மனைவியை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால், மனைவி வர மறுத்ததால் மனமுடைந்து சோகத்தில் இருந்த அவர், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் துறையினர் யுவராஜின் சடலத்தை கைப்பற்றி பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow