பாப்பாரப்பட்டியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உத்தரவின் பேரில் பாப்பாரப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாரி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ராஜாராம் ஆகியோர் வாகன தணிக்கை மேற்கொண்டபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்த இரண்டு இளைஞர்களை விசாரித்ததில் அந்த இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் இருசக்கர வாகனத்தையும் அவர்கள் வைத்திருந்த பையையும் சோதனை செய்ததில் கடத்தி வந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அவர் கள்பனைகுளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (18) மற்றும் வெள்ளாள முத்தூரைச் சேர்ந்த தமிழரசன் (23) என்பது தெரியவந்தது. இருவரும் இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து ஓசூருக்கு விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






